வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, May 23, 2011

கீரை

                                                             புளிச்ச கீரை 

தேகம் வலுக்கும் போகமிகக் கொடுக்கும் 
தீராத பித்தம் இரத்தபேதி யோட்டுங்காண் 
சுவாசம் சீராகும் வேல்விழிமாதே உண்ணத்தகுந்த 
புளிச்ச கீரை குணத்தை கூறு .

     புளிச்ச கீரை தேகத்திற்கு மிக்க வலுவை தரும் .போகத்தில் நாட்டத்தையும் ஏற்படுத்தும் . தீராத பித்தத்தை போக்கும் . இரத்த பேதியை நிறுத்தும் .நுரையீரலை வலுப்படுத்தும் .சுவாசத்தை சீர் செய்யும் .
    புளிச்ச கீரையின் எல்லாப் பகுதியும் உணவுக்கு ஏற்றதே . புளிச்ச கீரையுடன் பருப்பு ,நெய்  சேர்த்து சாதத்துடன் சாப்பிட உரிய பலன்களை தரும் .

குறிப்பு :- பெண்களுக்கு வரும் மார்புப் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் புளிச்ச கீரைக்கு உண்டு .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out