வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Wednesday, August 31, 2011

இதுல எந்த சாப்பாடு நீங்க சாப்பிடுறீங்க


சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள சத்துக்கள்

அரிசி:-

உடலை வளர்க்கும்.

கோதுமை:-

இரத்த விருத்தி,தாது விருத்தி,உடல்பலம்,உண்டாகும்.

அவல் :-

உடலுக்கு நன்மை தரும்

Tuesday, August 30, 2011

சாப்பிடும் சாப்பாட்டில் காய்கறியா-பாகம் -2 | அன்பு உலகம்

கொத்தவரங்காய் :


குடலுக்கு வலு ஊட்டும் . மலச்சிக்கலை நீக்கும்.

ஆனால் வாத நோய் ,மூட்டு வலி இவற்றுக்கு ஆகாது .

Saturday, August 27, 2011

சாப்பிடும் சாப்பாட்டில் காய்கறியா

முந்தய ஒரு பதிவில் நாம் உண்ணும் உணவில் 
உள்ள கலோரிகளைப் பற்றித் தெரிஞ்சுகிட்டோம்.


பிறகு பழங்களின் வகைகளும் அதன் பலன்களும் 
தெரிஞ்சுகிட்டோம்.



Friday, August 26, 2011

தத்துவம் வாழ்வின் மகத்துவம்

யதார்த்தமான தத்துவங்கள்


கோபத்தை கட்டு படுத்துவது உண்மையான வீரம்

பிறர் குறையை பார்க்கிறவன் தன் குறையை உணரமாட்டான்

முயலின் வெற்றி அதன் கால்களில் ,மனிதனின் வெற்றி
அவன் தன்னம்பிக்கையில்

Thursday, August 25, 2011

பழங்களும் அதன் பலன்களும் -4


பழங்களும் அதன் பலன்களும் பற்றி மூன்று பதிவுகள் 
படித்திருப்பீர்கள் இது நாலாவது பாகம் .

நாரத்தம் பழம்:-


இரத்த விருத்தி உண்டாக்கும்.உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
பித்தம் போக்கும்.

Wednesday, August 24, 2011

கணினியில் கீ போர்டு மூலம் புரோகிராம் திறக்க

நமது கணினியில் உள்ள எந்த புரோகிராம்மாக 
இருந்தாலும் அதனை கணினி கீ போர்டு மூலமாக 
ஓபன் செய்யலாம் .

இப்போ டாஸ்க் மேனேஜரை(கணினியின் கீழே 
மூலையில் உள்ள start பட்டனை  எப்பிடி ஓபன் 
செய்கிறோம் ,Ctrl + shift +Esc  என்ற மூன்று பட்டன்களை
சுலப முறை(short cut keys) பட்டன்களாக உபயோக படுத்துகிறோம்

Tuesday, August 23, 2011

பாத்துட்டு பயப்படாதீங்க

பூனைக்கு இருந்தாலும் குசும்பு ஜாஸ்தி தான்
உள்ளுக்குள்ள என்ன இருக்குன்னு நைசா பாக்கிறது பாரேன்



Cat Vs Toaster

என்ன பூனையோட சேர்ந்து நீங்களும் பயந்துட்டீங்களா


Monday, August 22, 2011

பழங்களும் அதன் பலன்களும் பாகம் -3

பழங்களும் அதன் பலன்களும் என்ற தலைப்பில் இரண்டு பாகம் பார்த்தோம் .இது மூன்றாவது பாகம் 


பப்பாளி பழம்:-

இரத்தம் உற்பத்தியாகும்
இரத்தம் சுத்தியாகும்

Sunday, August 21, 2011

வரவு எட்டணா செலவு பத்தணா

என் பார்வையில் பட்ட செய்தி உங்கள் பார்வைக்காக

வரவுக்கு மேல செலவு இருக்கிறதா ,பட்ஜெட் போட்டு
செலவு செய்ங்க .நாட்டுக்கு மட்டுமில்லை ,வீட்டுக்கும்
பட்ஜெட் அவசியம் .கையிருப்பு தீரும் வரை தாம்தூம்னு
செலவு செய்துவிட்டு காசு தீர்ந்தவுடன் பிறகு கையை
பிசைவதை விட முன்கூட்டியே பட்ஜெட் போட்டு வாழ்க்கை
ரன் செய்யலாமே .

ஆன்லைன் மூலம் நமக்கு பட்ஜெட் போட (உருவாக்க )
ஒரு தளம் உதவுகிறது .

Saturday, August 20, 2011

பதிவுலக நட்பிற்கு நன்றி

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் 
எனது அன்பான வணக்கங்கள்

இன்றைய பதிவு எனது நூறாவது பதிவாகும் 

நட்புக்காக , நண்பர்களின் அன்பிற்காக இந்த 
அன்பு உலகத்தை தொடங்கினேன் .

Friday, August 19, 2011

பழங்களின் பலன்கள் பாகம் -2

பழங்களின் பலன்களாக வாழைப் பழத்தினையும் எலுமிச்சை
பழத்தை பற்றியும் பார்த்தோம்.

இன்றும் சில பழங்களின் பலன்களை தெரிந்து கொள்வோம் .


ஆப்பிள் பழம் :-

Thursday, August 18, 2011

நான் ரசித்த பாடல்

இசை என்பது அனைவரும் ரசிக்க கூடிய ஒன்று
சந்தோசம் என்றாலும் ,சோகம் என்றாலும் ,பிறப்பு
இறப்பு இரண்டிலும் இரண்டற கலந்த ஒன்று இசை.
 .
திரையில் வரும் பாடல்கள் சில காலத்தால் அழியாததாக
இருக்கும். சில அந்த நேரத்தில் முணுமுணுக்க வைக்கும் .

Wednesday, August 17, 2011

வாங்களேன் பழம் சாப்பிடலாம்

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்கள்

நாம் அன்றாடம் எடுத்துகொள்ளும் பழவகைகளும் 
அதன் பயன்களும் என்ற தலைப்பில் நாம் 
பார்க்க போகிறோம் நண்பர்களே


முதலில் நாம் வாழைப்பழம் பற்றி பார்ப்போம்

வாழைப்பழம் நாம் அடிக்கடி எடுத்து கொள்ளும் பழ
வகைகளில் ஒன்று .
அதைப் பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம்
அது சம்பந்த மான நகைச்சுவை கூட உண்டு

Monday, August 15, 2011

பூமியே உனக்கு குளிருதா


செய்தி :
கடந்த வாரம் தமிழகத்தில் சில மாவட்டங்களில் நிலநடுக்கம் 

ஏன் 

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Photobucket


Sunday, August 14, 2011

வலைப்பூவில் தேவை இல்லாத பின்னூட்டங்களை அழிக்க

நண்பர்களே வணக்கம்

நமது வலைப்பூவில் (blog) நாம் தவறுதலாக போட்ட 
(comment) கமண்ட் அல்லது நமக்கு மற்றவர்கள் போட்ட 
கமண்ட் தேவை இல்லை என்றால் அதனை அழித்து 
விடுவோம் .

Saturday, August 13, 2011

சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா

உணவே மருந்து 

வாய்க்கு ருசியா சாப்பிடுகிறோமே அந்த சுவை எத்தனை
வகை தெரியுமா 


ஆறு வகை ,சரி அந்த ஆறு சுவைகளிலும் என்னங்க இருக்கு


Friday, August 12, 2011

மாதம் இருமுறை தாம்பத்யம்

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க

நம் உடலில் முக்கியமாக இரண்டை பார்க்க வேண்டும் .
இரத்தம் ,நிணநீர் இவை இரண்டும் உயிர்திரவங்கள் ஆகும் 
.
இந்த இரண்டும் சுத்தமாக இருக்கும் வரை நோய் தாக்காது .
இவை இரண்டும் கெட்டு போனால் ஆரோக்கியம் பாதிக்கிறது.

இவை இரண்டையும் சுத்த படுத்தும் பொழுது நோய் விலகுகிறது 
.

Thursday, August 11, 2011

நம் ஆசை நிறைவேற இதை செய்யுங்கள்

ஆசை நிறைவேற ஆறு படிகள் !

மணம் நினைத்தால் பணம் சம்பாதிக்கும் பாகம் –3

விருப்பத்தால் மட்டுமே பணத்தைக் குவிக்க முடியாது .
ஆனால், பணம் சேர்க்கும் ஆசை மனசு முழுவதும் பரவி , 
அதை அடைவதற்கான தெளிவான வழிமுறைகளைத் 
திட்டமிட்டு ,தோல்விகளை கண்டு கொள்ளாமல் விடாப்
பிடியாக செயல்பட்டால் பணம் குவியும்.

Tuesday, August 9, 2011

மலட்டுத் தன்மையும் அதன் காரணங்களும்

மலட்டு தன்மை

நமக்கு எவ்வளவு பிரச்சனை என்றாலும் ஒரு குழந்தையின் பொக்கை வாயோடு கூடிய சிரிப்பை பார்த்தால் நமது உள்ளத்திலும் சந்தோசத்தோடு ஓர் உவகை பிறக்கும் .

பிள்ளை செல்வம் என்பது ஒரு சிலருக்கு கிடைப்பதில்லை .
கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணை ஆண் மகனாகவும் ,
ஒரு பெண்ணை பெண்ணாகவும் இந்த சமூகம் மதிப்பது 
குழந்தை பேறு கிடைத்தால் தான் .

Monday, August 8, 2011

செய்தியும் தமாசுக்காரனும்


எல்லாருக்கும் வணக்கமுங்கோ 
நாந்தான் தமாசுக்காரன்,நான் ஏற்கனவே ஒரு பதிவுக்கு வந்திருக்கேன் . .

இனி தொடர்ந்து வரலாம்னு இருக்கேன் .நான் சொன்ன கமன்ட் -ல உங்களுக்கு எதுனா பிடிக்கலனா என்ன மன்னுச்சுடுங்கோ
 . 
செய்தி :
மனித ஆயுளை சுமார் பத்து ஆண்டுகள் நீட்டிக்க 
அமெரிக்காவில் மருந்து கண்டு பிடிப்பு

Sunday, August 7, 2011

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பர்களே வணக்கம்










இன்று நண்பர்கள் தினம்

Saturday, August 6, 2011

மருந்தின்றி வலி நீங்க மந்திரங்கள்


நண்பர்களே வணக்கம் 

தலை வழியா ஒரு மாத்திரை விழுங்கு 
கால் வழியா ஒரு மாத்திரை விழுங்கு 
உடல் வழியா ஒரு மாத்திரை விழுங்கு 


என்று எதற்கெடுத்தாலும் மாத்திரை எடுத்துக் 
கொள்வதால் உடலுக்கு தான் கேடு நண்பர்களே 

Friday, August 5, 2011

எரிச்சல் படுத்தாதீர்கள்



நண்பர்களே வணக்கம் 

நாம் நிறைய இடங்களில் பார்த்திருப்போம் .
மற்றவர்களுக்குஎரிச்சல் தருவது போல்(irritating )
சிலர் பேசிக் கொண்டே இருப்பார்கள் .

இதனால் சம்மந்த பட்டவர் பாதிப்படைவாரே 
என்று சிறிதும் நினைக்க மாட்டார்கள் .

சம்மந்தமே இல்லாமல் சிரிப்பார்கள் ,அப்பிடியே
அவர்கள் வாயிலேயே குத்தலாம் போல இருக்கும் .

குறுக்கு வழி








இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் பயன்படுத்தக்கூடிய சில முக்கிய 

ஷார்ட் கட் கீகள் 

Ctrl + +(plus sign): இணையப் பக்கத்தை பெரிதாக்கிட.

Ctrl + – (minus sign): பெரிதாக்கிய இணையப் பக்கத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர.

Thursday, August 4, 2011

வயித்துல என்ன பிரச்சனை

இயற்கை மருத்துவம்

நண்பர்களே வணக்கம்

தங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி

இன்று.............

வயிறு சம்பந்தமான நோய்களுக்கு வீட்டு வைத்தியம் 


வயிற்று வலிக்கு

  கிராம்பை நீரிலிட்டு கஷாயமாக்கி வேளைக்கு 30 மில்லி 
வீதம் அருந்திவர வயிற்று வலி குணமாகும் .


உஷ்ணத்தால் வந்த வயிற்று வலிக்கு

  ஆமணக்கு செடியின் இளந்தளிர் இலைகளை விளக்கெண்ணெய்
விட்டு வதக்கி தொப்புளின் மீது வைத்து கட்ட உஷ்ணத்தால் வந்த வயிற்றுவலி குணமாகும்

அஜீரணம் காரணமாக வயிற்று வலி வந்தால் பெருஞ்சீரகம் ,
கருஞ்சீரகம் இரண்டையும் கஷாயமாக்கி குடித்தால் அஜீரணம்
நீங்கி வயிற்று வலி குணமாகும் .

சோறு வடித்த நீரில் சிறிது உப்பிட்டு அருந்துவோருக்கு நன்கு
ஜீரண சக்தி உண்டாகும் .

ஆலமரத்து இளம் மொட்டுகளை கொண்டு வந்து ,அம்மியில்
வைத்து மைபோல் அரைத்து ,சிறிது எலுமிச்சை காயளவு
ஒரு தம்ளர் பசும்பாலில் கலந்து காலை ,மாலை இருவேளை
கொடுக்க சகல வயிற்று கோளாறும் தீரும் .

வயிறு உப்புசத்திற்கு

   சாதம் வடித்த கஞ்சி நீரில் சிறிது மஞ்சள் தூளை கலந்து ,
தெளிய வைத்து அந்நீரை அருந்த வயிறு உப்புசம் தணியும்.
கடுகு கீரையை கறி செய்து சாப்பிட்டால் வயிறு உப்புசம் 
தீரும் அத்துடன் வயிற்று பொருமல் ,மந்தம் தீரும் .


பிரண்டையை கணு நீக்கி வதக்கி அத்துடன் உளுத்தம் பருப்பு .
,சிறிது வெந்தயம் ,மிளகாய் வற்றல் ,சிறிது உப்பு சேர்த்து
துவையல் அரைத்து உணவுடன் உண்ண வயிற்று உப்புசம் தீரும்.
மற்றும் வயிற்று வலி ,வயிற்று கடுப்பு ,வயிற்று தொல்லை ,
மூலக் கடுப்பு ,மலச்சிக்கல் யாவும் தீரும்.

அஜீரனத்துக்கு மருந்து

அரைத் தேக்கரண்டி ஓமத்தையும் ,கால் தேக்கரண்டி
உப்பையும்,அரைத்து தூளாக்கி வாயிலுட்டு வெந்நீர் அருந்த 
அஜீரணம் நீங்கும். சிறிது நேரத்தில் நல்ல பசியெடுக்கும் .

ஜீரண சக்திக்கு பூண்டு குழம்பு :-20 பூண்டு பற்களை எண்ணையில்
வதக்கி ,சிறிதளவு மிளகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,கொத்துமல்லி ,
வெந்தயம் ,மஞ்சள்,பெருங்காயம் இவற்றை நன்றாக அரைத்து
குழம்பாக்கி தாளித்து மதியம் ,இரவு உணவுடன் சாப்பிட்டு வர
நல்ல பசியை தூண்டும் .நாவில் உள்ள கசப்பு சுவை மாறும் .

நல்ல பசியெடுக்க

இலந்தளிராக உள்ள கொய்யா இலைகளை கொண்டு வந்து ,
தண்ணீரில் கழுவிவிட்டு காலை வேளை மட்டும் ஐந்து
இலைகளை வாயில் போட்டு மென்று தின்று விட்டால் நல்ல
பசி உண்டாகும் .

மிளகு ,சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து தூள் செய்து
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர பசி மந்தம் நீங்கும் .

இலந்தை வேரை கஷாயமாக்கி அருந்த நல்ல பசி உண்டாகும் .
அத்துடன் மலச்சிக்கல் ,கீழ் வாதம் தீரும் .

காரா கருணைக்கிழங்கு, அகத்திக் கீரை ,இஞ்சி ,செவ்வாழைப் 
பழம் ,வெள்ளரிக்காய் ,பசு தயிர் ,பேரீச்சம் பழம் ,பெருங்காயம்
,பனை நுங்கு ,நாரத்தங்க்காய் ஊறுகாய் ,சுண்டைக் காய் வற்றல் ,வெள்ளாட்டுப் பால் ,ஆகியவை சாப்பிட நல்லபசி உண்டாகும் .


இஞ்சி சாரும் ,எலுமிச்சை சாரும் கலந்து சிறிது உப்பிட்டு
அருந்தினால் சகல வயிற்றுக் கோளாறும் தீரும் .
சீரகத்தை பொன் வருவலாக வறுத்து தூளாக்கி மூன்று விரலால்
எடுக்கும்அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் பருக வேண்டும் .
இவாறு காலை மாலைசாப்பிட நன்கு பசி எடுக்கும் 
.

இத்துடன் பூண்டு ,மிளகு சீரகம் சேர்த்து சீரக ரசம் வைத்து 
உணவுடன் உண்ண பசி மந்தம் தீரும் ,ஜீரண சக்தி உண்டாகும் .

ஏப்பம் வருவதைத் தடுக்க

   பாகல் இளைச்சாற்றை எடுத்து ,ஒரு கரண்டி மஞ்சள் தூளை
கலந்து அருந்த ஏப்பம் வருவது நிற்கும் .
வாயுத் தொல்லையும் தீரும் .

கொத்துமல்லியை வறுத்து ஒன்றிரண்டாக இடித்து கஷாயம் 
செய்துசெய்து காலை மாலை அருந்த அஜீரணக் 
கோளாறுகள் அகலும் . 

 

Wednesday, August 3, 2011

விடா முயற்சியே வெற்றிக்கு சாவி


நண்பர்களே வணக்கம் .

தங்களின் தொடர் ஆதரவிற்கு என் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .


நேற்றைய தொடர்ச்சி .....

டார்பின் மாமா அந்த சிறுமியை நெருங்கிய உடன் அந்த
சிறுமி சிறிதும்பயப்படாமல் ஒரு அடி முன்னே எடுத்து 
வைத்து அவரின் கண்களையேஉற்று பார்த்துக் கொண்டு
அவரை விட அதிக சத்தமாக 

Tuesday, August 2, 2011

தங்க சுரங்கம் ரைஸ் மில்லாச்சு


தன்னம்பிக்கை தொடர் 

நேற்றைய தொடர்ச்சி .....

நண்பர்களே வணக்கம்

சுரங்கத்தை ஆராய்ந்து பார்த்த இன்ஜீனியர் சில
கணக்கெல்லாம் போட்டுசில உண்மைகளை அந்த
கயலாங்கடைக் காரனிடம் சொன்னார் .

Monday, August 1, 2011

தங்க புதையலுக்கு ஆசைப் பட்டு

தன்னம்பிக்கை தொடர் 
பாகம் -2

துவண்டு  போகக் கூடாது


நண்பர்களே வணக்கம் ,கடந்த பதிவில்
மனம் நினைத்தால் பணம் சம்பாதிக்கும்
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடங்கினேன் 
.
அதில் ,

திட்டவட்டமான குறிக்கோளை மனதில் பதிய வைத்து அது நிறைவேறும் வரை அதில் விடாப்பிடியாக இருந்தால் எப்பிடிப்பட்ட வெற்றிகளையும் அடையலாம் என்று பார்த்தோம் .

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out