வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, November 20, 2011

இருமல் வந்தால்





வறட்டு இருமல் வந்தால் அதற்கு நிவாரணி 



விளா மரத்தின் பிசினை சுத்தம் செய்து சுண்டைக்காயளவு 
அரைத்தேக்கரண்டி நெய்யுடன் கலந்து காலை,மாலை 
மறுநாள் காலை என மூன்று வேளை உட்கொண்டால் 
வறட்டு இருமல் தீரும்.


ஒரு கரண்டி வெங்காயச் சாறும் ஒரு கரண்டி தேனும் 
கலந்து தினமும் மூன்று வேளை குடித்தால் 
இருமல் போய்விடும்.


ஒரு கிராம்படன் சிறிது உப்பையும் சேர்த்து மென்று 
தின்றால் இருமல் ,தொண்டை எரிச்சல் ஆகியவை 
போய்விடும்.


மிளகைத் தூளாக்கி வெண்ணையில் குழைத்து தினசரி 
மூன்று வேளை உண்டுவர இருமல் குணமாகும்.


மிளகை பொரிகடலையுடன் மென்று தின்றாலும் 
இருமல் குணமாகும்


ஓமவல்லி (கற்பூரவல்லி ) இலையைக் காம்புடன் 
எடுத்துக் கழுவி வெந்நீரில் கொதிக்க வைத்து 
குடிநீராக்கி குடிக்க இருமல் தீரும்.






சளித்தொல்லையால் இருமல் வந்தால் 


தேங்காய் பாலில் சிறிது பனங்கற்கண்டு போட்டு 
சூடாக்கி மூன்று நாட்கள் இரவில் தூங்கச் செல்வதற்கு 
முன் குடித்து வந்தால் சளித்தொல்லையால் வரும் 
இருமல் நீங்கும்.


உலர்ந்த திராட்சைப் பழத்தைப் பாலில் போட்டுக் 
காய்ச்சி குடித்தால் இருமல் தீரும்.


செந்நாயுருவிப் பட்டையை மிளகு சேர்த்து இடித்து 
தூளாக்கி தேனில் குழைத்து காலை ,மாலை 
உண்டுவர இருமல் தீரும்.


நன்றி 

27 comments:

r.v.saravanan said...

பயன்மிக்க குறிப்பு

நன்றி நண்பரே

Jaleela Kamal said...

பயனுள்ள குறிப்பு

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள தகவல்கள் ரமேஷ்,நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

குளிர் காலம் தொடங்கி விட்டதும் இந்த இருமல் பிரச்சனை ஆரம்பித்துவிடும்...

நல்ல டிப்ஸ்...

வாழ்த்துக்கள்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உபயோகமான பதிவு .பகிர்வுக்கு நன்றி .

Yaathoramani.blogspot.com said...

காலத்திற்கு ஏற்ற பயனுள்ள பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான நலக் குறிப்புகளை அறி்ந்துகொண்டேன் நண்பா..

அம்பாளடியாள் said...

அருமையான தகவல் நல்ல குளிர்காலம் இப்போது வெளிநாடுகளில் .மிக்க நன்றி சகோ காலம் உணர்ந்து இட்ட
பயனுள்ள தகவலுக்கு.என் தளத்தில் ஒரு நீதி கேட்டு கவிதை வெளிவந்துள்ளது .தவறாமல் உங்கள் கருத்தினையும்
ஊக்குவிப்பினையும் தாருங்கள் .வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் சிறப்புற .

கோகுல் said...

தக்க நேரத்துக்கு ஏற்ற பதிவு.நன்றி!

சென்னை பித்தன் said...

அனைவருக்கும் அடிக்கடி தொந்தரவு தருவது இருமல்.அதற்கான மருத்துவம் பற்றிய நல்ல பகிர்வு.

சென்னை பித்தன் said...

த.ம.6

Jaleela Kamal said...

http://www.tamilkudumbam.com/stiching/

thaiyal link keeddiingkalee, ippoothaikku itha paarungkal
piraku veeru irnthaa anuppureeen

M.R said...

r.v.saravanan said...
பயன்மிக்க குறிப்பு

நன்றி நண்பரே//

கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

Jaleela Kamal said...
பயனுள்ள குறிப்பு//

நன்றி சகோ

M.R said...

RAMVI said...
பயனுள்ள தகவல்கள் ரமேஷ்,நன்றி.//

நன்றி சகோதரி

M.R said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
குளிர் காலம் தொடங்கி விட்டதும் இந்த இருமல் பிரச்சனை ஆரம்பித்துவிடும்...

நல்ல டிப்ஸ்...

வாழ்த்துக்கள்..//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
உபயோகமான பதிவு .பகிர்வுக்கு நன்றி .//

நன்றி நண்பரே

M.R said...

Ramani said...
காலத்திற்கு ஏற்ற பயனுள்ள பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4//


கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

முனைவர்.இரா.குணசீலன் said...
தேவையான நலக் குறிப்புகளை அறி்ந்துகொண்டேன் நண்பா..//

மிக்க நன்றி நண்பரே

M.R said...

அம்பாளடியாள் said...
அருமையான தகவல் நல்ல குளிர்காலம் இப்போது வெளிநாடுகளில் .மிக்க நன்றி சகோ காலம் உணர்ந்து இட்ட
பயனுள்ள தகவலுக்கு.என் தளத்தில் ஒரு நீதி கேட்டு கவிதை வெளிவந்துள்ளது .தவறாமல் உங்கள் கருத்தினையும்
ஊக்குவிப்பினையும் தாருங்கள் .வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் சிறப்புற .//


அழகிய கருத்திற்கு நன்றி சகோ..

M.R said...

கோகுல் said...
தக்க நேரத்துக்கு ஏற்ற பதிவு.நன்றி!//


நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
அனைவருக்கும் அடிக்கடி தொந்தரவு தருவது இருமல்.அதற்கான மருத்துவம் பற்றிய நல்ல பகிர்வு.//


நன்றி ஐயா

M.R said...

Jaleela Kamal said...
http://www.tamilkudumbam.com/stiching/

thaiyal link keeddiingkalee, ippoothaikku itha paarungkal
piraku veeru irnthaa anuppureeen

தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ

குறையொன்றுமில்லை. said...

அனைவருக்குமே பயன்படும் வி
தத்தில் குறிப்பு கொடுத்திருக்கீங்க.

மகேந்திரன் said...

மிகவும் பயனுள்ள செய்தி நண்பரே,
அடிக்கடி இந்த பிரச்சனை வந்து நம்மை தொல்லைப்படுத்தும்.
அழகான அற்புதமான தீர்வு சொல்லியிருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

பனிக்காலத்தில் போடப்பட்ட பயன் உள்ள குறிப்பு

சசிகுமார் said...

நன்றி நண்பா... பயனுள்ள குறிப்புகள்....

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out