வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Wednesday, October 5, 2011

எனக்கு ரொம்ப பிடிக்கும்



நண்பா நாளை எனக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை
செய்யப் போகிறார்கள் ,அதற்கு உன் மூளையை
தருவாயா ?



ஏன் என்றால் உபயோகப் படுத்தாமல் ஃப்ரெஸ் -ஆ
இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்



பேசு 

கண்கள் பேசினால்:- காதல் 

கண்ணீர் பேசினால் :- பாசம் 

பணம் பேசினால் :- பேராசை 

எல்லோரும் பேசினால் :- உலகம் 

நீ மட்டும் பேசினால் :- மெண்டல் 



தத்துவம்

கண்களில் கண்ணீர் வர முக்கிய நான்கு காரணங்கள்

காதல் உடைந்தால்


நட்பு முறிந்தால்


உறவு இறந்தால்


வெங்காயம் அரிந்தால்



ஒருவன் :-

நான் கேட்கும் கேள்விக்கு தெரியும் ,தெரியாது என்று
மட்டும் பதில் சொல் ,வேறு வார்த்தை சொல்ல கூடாது

மற்றொருவன் :- ம்........

ஒருவன் :- 

நீ ஒரு மென்டல்னு உனது நண்பர்களுக்கு தெரியுமா ?




எங்கோ படித்தது 



ஒருவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போகிறான். 
அங்கே ஒரு டிவைன் கேண்டீன் இருக்கிறது. உள்ளே 
போகிறான். விதவிதமான திண்பண்டங்கள், பலகாரங்கள்
சுவீட் காரங்கள் இருக்கின்றன.

விலைப்பட்டியலைப் பார்க்கிறான்; அதிக விலை! 
தலையைச் சுற்றுகிறது.

கல்லாப் பெட்டியில் இருப்பவன் சொல்கிறான்:

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். 
பில் உங்களுக்குத் தரப்படாது. உங்கள் மகன் வரும்போது
அந்தப் பில் தரப்படும்

அதனால் இவனும் போய் உட்கார்ந்து மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டுத் திருப்தியோடு வெளியே வருகிறான்.

பில் தரப்படுகிறது.

பார்க்கிறான் - 10,000 ரூபாய்.

அவனுக்கே அதிர்ச்சி.

சாப்பிட்டது 1000 ரூபாய் கூட இருக்காது. பில் இல்லை
என்கிறார்கள். இப்போது அதற்குப் பத்தாயிரம் ரூபாய் 
பில் என்கிறார்கள்.

சொர்க்கத்தில் அநியாயம்என்கிறான்.

அதற்கு அந்த ஹோட்டல்காரன் விளக்குகிறான்:

நீங்கள் கேட்டது சரிதான். உங்கள் பில் 1000 ரூபாய்தான்
வருகிறது. அதை உங்கள் மகன் வரும்போது அவரிடம்தான்
கொடுத்து வசூலிப்போம்

அப்படி என்றால் இது?” என்றான் இவன்.

இது உங்கள் அப்பா சாப்பிட்டுவிட்டுப் போன பில்” 
என்றான் ஹோட்டல்காரன்.



41 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு .அருமை.

கூடல் பாலா said...

சுவாரஸ்யமான பகிர்வு ...அருமை !

Mathuran said...

அசத்தலான பதிவு
முதலாவது காமடி கலக்கல்

K said...

அடடா அழகான காமெடி தோரணங்கள்! வாழ்த்துக்கள்!

கோகுல் said...

ஹா!ஹா!கலக்கல் போங்க!

அப்பறம் எனக்கு மட்டும் சொல்லுங்க!
உங்க நண்பர்களுக்கு தெரியுமா தெரியாதா?

மகேந்திரன் said...

காமெடிக் கட்டுகள் அருமை.
சிரித்தேன் ரசித்தேன்..
பேசுதல் பற்றி அழகா சொல்லி இருக்கீங்க..

Admin said...

புகைப்படங்களும், நகைச்சுவைகளும் சூப்பர் நண்பா! பகிர்வுக்கு நன்றி!

சென்னை பித்தன் said...

த.ம.8
வாய்விட்டுச் சிரித்தேன்.

செங்கோவி said...

தத்துவம் கண் கலங்க வைக்குது.

Unknown said...

super...மாப்ள இதுவும் ஒரு லாஜிக் கொஸ்டீன்...நீங்க இப்பவும் சிகரட் புடிக்கறீங்களா...YES or NO only!

(ஆனா நீங்க சிகரட் புடிக்கறது யாருக்கும் தெரியக்கூடாது இது உங்க எண்ணம்) பதில் ப்ளீஸ் ஹிஹி!

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் பாஸ்,
காமெடி சூப்பர் பாஸ்,

அப்புறமா பேசு கவிதையும் யதார்த்தத்தினைச் சொல்லி நிற்கிறது.

நிரூபன் said...

நல்லதோர் பதிவினைக் கலந்து கட்டி எழுதியிருக்கிறீங்க.

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கல் காமடி கும்மி ஹா ஹா ஹா ஹா...!

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அழகு .அருமை.

நன்றி நண்பரே ,உடல்நிலை சரியாகி விட்டதா நண்பரே

M.R said...

koodal bala said...
சுவாரஸ்யமான பகிர்வு ...அருமை !

வாங்க நண்பரே ,நலமாக உள்ளீரா நண்பரே,உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க் வேண்டிக்கொள்கிறேன் நண்பா

M.R said...

மதுரன் said...
அசத்தலான பதிவு
முதலாவது காமடி கலக்கல்

நன்றி நண்பா

M.R said...

Powder Star - Dr. ஐடியாமணி said...
அடடா அழகான காமெடி தோரணங்கள்! வாழ்த்துக்கள்!//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

கோகுல் said...
ஹா!ஹா!கலக்கல் போங்க!

அப்பறம் எனக்கு மட்டும் சொல்லுங்க!
உங்க நண்பர்களுக்கு தெரியுமா தெரியாதா?

ஹா ஹா ஹா

M.R said...

மகேந்திரன் said...
காமெடிக் கட்டுகள் அருமை.
சிரித்தேன் ரசித்தேன்..
பேசுதல் பற்றி அழகா சொல்லி இருக்கீங்க..//

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

Abdul Basith said...
புகைப்படங்களும், நகைச்சுவைகளும் சூப்பர் நண்பா! பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.8
வாய்விட்டுச் சிரித்தேன்.

நன்றி ஐயா

M.R said...

செங்கோவி said...
தத்துவம் கண் கலங்க வைக்குது.

ஹா ஹா அழாதீங்க நண்பா ,நம் நட்பு உடையாது

M.R said...

விக்கியுலகம் said...
super...மாப்ள இதுவும் ஒரு லாஜிக் கொஸ்டீன்...நீங்க இப்பவும் சிகரட் புடிக்கறீங்களா...YES or NO only!

(ஆனா நீங்க சிகரட் புடிக்கறது யாருக்கும் தெரியக்கூடாது இது உங்க எண்ணம்) பதில் ப்ளீஸ் ஹிஹி!//


ஹா ஹா ஹா

M.R said...

நிரூபன் said...
இனிய மதிய வணக்கம் பாஸ்,
காமெடி சூப்பர் பாஸ்,

அப்புறமா பேசு கவிதையும் யதார்த்தத்தினைச் சொல்லி நிற்கிறது.

மாலை வணக்கம் நண்பரே.

நல்லதோர் பதிவினைக் கலந்து கட்டி எழுதியிருக்கிறீங்க.

கருத்துக்கு நன்றி நண்பா

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
கலக்கல் காமடி கும்மி ஹா ஹா ஹா ஹா...!

தங்கள் சந்தோசத்திற்கு சந்தோசம் நண்பரே

முனைவர் இரா.குணசீலன் said...

சொர்க்கத்துக்குப் போற ஆசையே விட்டுப்போச்சு அன்பரே...

Unknown said...

ஆஹா அழகான காமெடி

தனிமரம் said...

கலக்கல் பதிவு சிரிப்பு வெடிதான்!

Anonymous said...

"அது" எனக்கு ரொம்ப பிடிக்கும்னு தைரியமா தலைப்பு வைங்க...ஹா ஹா ஹா

Unknown said...

அருமை சகோ!
நகைச்சுவை நன்று!

புலவர் சா இராமாநுசம்

M.R said...

முனைவர்.இரா.குணசீலன் said...
சொர்க்கத்துக்குப் போற ஆசையே விட்டுப்போச்சு அன்பரே...//

ஹா ஹா

M.R said...

வைரை சதிஷ் said...
ஆஹா அழகான காமெடி

நன்றி நண்பரே

M.R said...

தனிமரம் said...
கலக்கல் பதிவு சிரிப்பு வெடிதான்!//

நன்றி நண்பரே

M.R said...

ரெவெரி said...
"அது" எனக்கு ரொம்ப பிடிக்கும்னு தைரியமா தலைப்பு வைங்க...ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா

M.R said...

புலவர் சா இராமாநுசம் said...
அருமை சகோ!
நகைச்சுவை நன்று!

நன்றி ஐயா

அம்பாளடியாள் said...

அருமையான கைவேலை .அசத்தலான நகைச்சுவையும் தத்துவமும் வாழ்த்துக்கள் ,மிக்க நன்றி பகிர்வுக்கு .......

RAMA RAVI (RAMVI) said...

ஜோக்குகளை ரசித்து சிரித்து படித்தேன் ரமேஷ். அருமை.

படங்கள் மிக அழகு.

kobiraj said...

அசத்தல்

குறையொன்றுமில்லை. said...

அழகான காமெடியுடன்கூடிய அசத்தலான பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

புகைப்படங்களும், நகைச்சுவைகளும் சூப்பர் ! பகிர்வுக்கு நன்றி/

சீனுவாசன்.கு said...

சூப்பர் சோக்கு...ஹி...ஹி...

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out