வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, October 30, 2011

சிரித்து மகிழுங்கள்







கபாலி உன்னை போலீஸ் தேடுது

நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே

அதான் ,ஏன் பண்ணலேன்னு கேட்க தேடுது





சார் , இவன் கார்ல ஓவர் ஸ்பீட் போனான்

நீங்க , எப்பிடி மடக்கினீங்க

சைக்கிள்ல போய்




தினமும் காலையும் ,மாலையும் வந்து ஸ்டேசன்ல 
கையெழுத்து போட்டுட்டு போகனும் தெரியுதா ?

சரிங்கய்யா ,அப்புறம் வழக்கம் போலத் திருடப் 
போகலாமில்லே ஐயா ?




எங்க ஊரு போலிஸ் ,திருட்டு போன மறுநாளே 
திருடனை பிடிச்சுடுவாங்க

இதென்ன பிரமாதம் ,எங்க ஊர் போலீஸ்க்கு திருட்டு 
போறதுக்கு முதல் நாளே தெரிஞ்சுடும்





நீதிபதி : ஏம்பா இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் 
தனியாவா செஞ்ச

குற்றவாளி : ஆமா ஐயா .இப்ப காலம் கெட்டுக் கிடக்குது.
யாரையும் நம்ப முடியல




அன்பே ,என்னை மட்டும் பிடிக்கலேனு சொல்லிடாதே ,ப்ளீஸ்

சரி ,உன் குடும்பமே பிடிக்கல






யாருப்பா அந்த ஜோடி ,ரெண்டு மணி நேரமா ஒரே 
இளநீரைக் குடிச்சுக்கிட்டு இருக்காங்க

விளம்பரத்துக்காக அந்த கடைக்காரன் அவங்களை 
காசு கொடுத்து அப்பிடி நிக்க வைச்சிருக்கான்ப்பா





தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாலை எங்க 
பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம்,பொண்ணு எப்பிடி?

நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல 
பொண்ணுதான் சார்




தம்பி இந்த லெட்டரை உங்க அக்காகிட்ட கொடு

அதுக்கு வேற ஆளை பாரு

ஏண்டா ,உங்க அக்கா நல்லாத்தானே இருக்கா!
 

24 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
நினைத்து நினைத்து சிரிக்கும் படியாக
அருமையாக உள்ளது
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 2

Unknown said...

மகிழ்ச்சி

RAMA RAVI (RAMVI) said...

சிரித்து மகிழ்ந்தோம் ரமேஷ்.நன்றாக இருக்கு.

aalunga said...

அருமையான துணுக்குகள்

மகேந்திரன் said...

மனதை லேசாக்கும் அருமையான
நகைச்சுவைத் துணுக்குகள் நண்பரே.
ரசித்து சிரித்தேன்....

செங்கோவி said...

நன்றி ரமேஷ்..

சக்தி கல்வி மையம் said...

அனைத்து நகைச்சுவை துணுக்குகளும் அசத்தல் ரமேஷ்.

rajamelaiyur said...

செம நகைசுவை

நாய் நக்ஸ் said...

நல்லா இருக்கு ..:)

Admin said...

(கடைசியை தவிர) அனைத்தும் நன்றாக இருந்தது நண்பா! பகிர்வுக்கு நன்றி!

ஸாதிகா said...

நகைசுவைத்துணுக்குகள் அத்தனையும் அசத்தல்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா உங்க அக்கா நல்லாதானே இருக்கா....? முடியல முடியல.....ஓஓஓஓஓஒஹா ஹா ஹா ஹா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் அசத்தல்...


உண்மையில் நல்லாயிருக்குங்க...

கூடல் பாலா said...

எல்லா ஜோக்கும் கல கல ...

அம்பலத்தார் said...

மனதுக்கு இதமான துணுக்குகள்

r.v.saravanan said...

சிரித்தேன் மகிழ்ந்தேன் நன்றி நண்பா

அம்பாளடியாள் said...

சிரிக்க வைத்த நகைச்சுவைப் பகிர்வுக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் ...........

சென்னை பித்தன் said...

சிரிக்க வைத்த பகிர்வு.
த.ம.6

K.s.s.Rajh said...

/////
அன்பே ,என்னை மட்டும் பிடிக்கலேனு சொல்லிடாதே ,ப்ளீஸ்

சரி ,உன் குடும்பமே பிடிக்கல/////

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு......

தமிழ்மணம்-7

M.R said...

கருத்தும் ,வாக்கும் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

நேரமின்மையால் தனித்தனியாக கருத்திட முடியவில்லை ,மன்னிக்கவும் நட்புக்களே

Unknown said...

மாப்ள நல்லா இருக்கு நன்றி!

முனைவர் இரா.குணசீலன் said...

வாய்விட்டுச் சிரித்தேன் நண்பா..

நிரூபன் said...

கலக்கலான நகைச்சுவைகள் பாஸ்..

கபாலி போலீஸ் நகைச்சுவையினை நினைத்துச் சிரித்துக் கொண்டிருக்கேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out