வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, August 9, 2011

மலட்டுத் தன்மையும் அதன் காரணங்களும்

மலட்டு தன்மை

நமக்கு எவ்வளவு பிரச்சனை என்றாலும் ஒரு குழந்தையின் பொக்கை வாயோடு கூடிய சிரிப்பை பார்த்தால் நமது உள்ளத்திலும் சந்தோசத்தோடு ஓர் உவகை பிறக்கும் .

பிள்ளை செல்வம் என்பது ஒரு சிலருக்கு கிடைப்பதில்லை .
கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணை ஆண் மகனாகவும் ,
ஒரு பெண்ணை பெண்ணாகவும் இந்த சமூகம் மதிப்பது 
குழந்தை பேறு கிடைத்தால் தான் .


இல்லை என்றால் அவனுக்கு பொட்டை என்றும் ,
அப்பெண்ணிற்கு மலடி என்றும் பெயர் சூட்டி விடுவார்கள் .
இதனால் அவர்களின் மனம் புண்படுமே என்று நினைக்காமல் 
வார்த்தைகளை அள்ளி வீசி விடுவார்கள் ஒரு சில சமூகத்தார் 

மலட்டு தன்மைக்கான காரங்களை கண்டு 
தகுந்த மருத்துவரிடம் காண்பித்து குறைகளை நீக்கி 
மழலை செல்வம் பெற்றிடுங்கள் 

மலட்டு தன்மையின் வகைகள்

1.கருவே தரிக்காமல் இருப்பது முதல் நிலை மலட்டுத் தன்மை

2.கருத்தரித்த பின்னர் கருச் சிதைவு ஏற்படுவதை இரண்டாம்
நிலை மலட்டுத் தன்மை (அடிக்கடி கருச்சிதைவு )


ஆண்களின் மலட்டுத்தன்மையின் காரணங்கள் :

1.ஆணின் விந்தணுவில் உயிர் அணுக்கள் இல்லா நிலை

2.உயிரணுக்களின் ஓட்டம் இல்லா நிலை

3.ஓட்ட உணர்வு குறைவாக இருந்து முன்னோக்கி ஊர்ந்து 
போகாத நிலை

4.விந்தனுவின் பீச்சும் திறன் இல்லாமை

5.உயிரணுக்களை கொள்ளக் கூடிய எதிர்மறைப் புரதங்கள்
விந்திலே கலந்திருத்தல்.

6.உயிர் அணுக்கள் வெளியேறும் பாதையில் அடைப்புகள் 
.
7.பிட்யூட்டரி சுரப்பியின் சரிவர செயலார்ராத தன்மை.

8.விரைப்பையில் விதை இல்லாமல் இருத்தல்

9.விதைப் பைக்குள் விதையானது திருகிக் கொண்டு இருத்தல் .

10.காயம் ஏற்படுதல்,வீக்கம் ,அடி படுதல் போன்றவற்றால் 
விதையில் ஏற்படும் பாதிப்பு .

11.விரைவீக்கம் எனப்படும் பாதிப்பு

12.முற்றிய காசநோய்

13.விதையானது வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் 
பாதிப்படைவது ,இதற்க்கு நாம் அணியும் மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் காரணமாகும் .

14.தொடர்ந்து தீய பழக்க வழக்கங்கள் (மது,புகை மற்றவை ) 
 
பெண்ணின் முதல்நிலை மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்

1.முட்டை ,மாதவிடாய்க்குப் பிறகு14-15 நாட்களில் 
கருப்பையிலிருந்து முதிர்ந்த கருவாக வெளியேற 
வேண்டும் .குழந்தை இல்லாத பெண்ணிற்கு இது 
நிகழ்வதில்லை .

2.வெளியாகும் முட்டை இணைக்குழாயின் விரல் போன்ற
அமைப்புகள் வழியாக கருப்பைக்கு வருவதில் தடை
 .
3.இணைக்குழாயில் அடைப்புகள்.

4.கர்ப்பப்பை சுவர் கருவை பதிய வைத்து காக்கும் பக்குவம்
பெறாத தன்மை.

5.கரு தனது பிரயாணத்தின் முடிவில் கர்ப்பப்பையில் 
சேரும்பொழுது தன் இயல்பு கெடுதல் .

6.கர்பப்பை வாயில் தொற்று நோய் ,பிறநோய்களின் பாதிப்புகள்

  இவைகள் தான் காரணங்கள் .இவைகளை அறிந்து கொண்டு
  குறைகளை நீக்கி சந்தோசமாக வாழுங்கள் .
     

அடுத்த பதிவில் சிந்திப்போம் நண்பர்களே .

நண்பன்
எம் .ஆர் 

26 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தெளிவான குறிப்புகள்..
பயனுள்ள பதிவு...

Unknown said...

இதை சரி செய்யும் முறைகளையும் அடுத்த பதிவில் எதிர் பார்க்கிறோம் M .R .சார்

கூடல் பாலா said...

மிகவும் அறிவுப் பூர்வமான பதிவு !பலருக்கு பயன்படும் !

சக்தி கல்வி மையம் said...

ஒரு பயனுள்ள பதிவு.
பல தெரியாத விஷயங்கள்..

கோகுல் said...

எத்தனை செல்வங்கள் இருந்தாலும் பிள்ளைச் செல்வத்திர்ற்கு ஈடாகா!
பயனுள்ள பகிர்வு நன்றி!

Yaathoramani.blogspot.com said...

தெளிவூட்டும் பயனுள்ள பதிவு
படங்களுடன் மருத்துவரைப்போல
விளக்கி இருப்பது அருமை
தொடர்ந்து வருகிறோம்
தொடரவழ்த்துக்கள்

vidivelli said...

பயனுள்ள பதிவு..
பாராட்டுக்கள்..
விளக்கிய விதம் சுப்பர் சகோ/

தமிழ்வாசி பிரகாஷ் said...

பயனுள்ள பதிவு

அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

மாய உலகம் said...

தெளிவான பயனுள்ள பதிவு தெரிந்து கொண்டோம் நன்றி சகோ

Anonymous said...

நல்ல பதிவு...ரமேஸ்...இதெல்லாம் தாண்டி நமக்கு வேண்டியவை

1.தெய்வ நம்பிக்கை.
2.பெற்றோரை போற்றுதல்.
3.நல்ல பழக்க வழக்கங்கள்.

அழகாய் தொகுத்ததுக்கு நன்றி நண்பரே...

Unknown said...

மகுடமாய் ஏழாவது ஒட்டு நண்பா

Unknown said...

குழந்தை செல்வதை எதிப்பார்த்து காத்திருப்போருக்கு மிகவும் அவசியமான தகவல்கள்

ஹேமா said...

மிக மிகத் தேவையான பதிவு !

மகேந்திரன் said...

மலட்டுத்தன்மை பற்றிய
விளக்கப்பதிவு
அருமை

Chitra said...

Informative post.

M.R said...

வாங்க சௌந்தர்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

===============================================

M.R said...

வாங்க ராக்கெட் ராஜா
தங்களை வரவேற்கிறேன்

வருகைக்கு நன்றி நண்பரே

ஆண்மை பெருக வழிமுறைகள் இரண்டு பதிவாக ஜூலை மாதத்தில் பதிவிட்டிருக்கிறேன் நண்பரே .

இருந்தாலும் மற்ற வழிமுறைகளையும் பதிவிட முயற்சிக்கிறேன் நண்பரே .

M.R said...

வாங்க பாலா தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே .

=======================================

வாங்க கருன் நண்பரே

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .

===========================================
வாங்க கோகுல்

நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் நன்றி நண்பரே .

===========================================

வாங்க ரமணி நண்பரே

தங்களின் ஆழமான கருத்துக்கு நன்றி நண்பரே .

=======================================

வாங்க விடிவெள்ளி சகோ...

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ...

=============================================

வாங்க பிரகாஷ்
வருகைக்கும் .வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .
============================================

M.R said...

வாங்க மாய உலகம்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ..

M.R said...

வாங்க reveri

நல்ல கருத்துகளை சொல்லியுள்ளீர்கள் நன்றி

M.R said...

வாங்க ரியாஸ்

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க ஹேமா

தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சகோ..

========================================

வாங்க மகேந்திரன்

தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

=========================================

வாங்க சித்ரா

தங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்கும் நன்றி சகோ..

நிரூபன் said...

நல்லதோர் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
படங்களோடு இணைந்த விளக்கங்களும் அருமை,

M.R said...

வாங்க நிரூபன் ,வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே

pasumai herbals dindigul said...

ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய
ஆணுறுப்பு வளர்ச்சி பெற
நத்தைச்சூரி 50 கிராம்
ஓரிதழ்தாமரை 50
நீர்முள்ளி 50 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம்
நெருஞ்சி 50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 50 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
பாதாம்பிசின்50
ஆலவிதை 50
அரசவிதை50
நாகமல்லி இலை 50
சாலாமிசிரி 50
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
கருஞ்சீரக எண்ணெய்
வெள்ளைஎள் எண்ணெய்
நாகமல்லி எண்ணெய்
மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

pasumai herbals dindigul said...

ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய
ஆணுறுப்பு வளர்ச்சி பெற
நத்தைச்சூரி 50 கிராம்
ஓரிதழ்தாமரை 50
நீர்முள்ளி 50 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம்
நெருஞ்சி 50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 50 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
பாதாம்பிசின்50
ஆலவிதை 50
அரசவிதை50
நாகமல்லி இலை 50
சாலாமிசிரி 50
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
கருஞ்சீரக எண்ணெய்
வெள்ளைஎள் எண்ணெய்
நாகமல்லி எண்ணெய்
மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out