வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, September 29, 2011

வாங்க சிரிக்கலாம் கொஞ்சம் கவலைய மறக்கலாம்


வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

கவலைய மறக்க சிரித்து பழகு 

கவலைக்கு மருந்து சிரிப்பு 

அந்த நகை தான் விலையேறி போச்சு அதனால் அதை 
நினைத்து கூட பார்க்க முடியாது ,இந்த நகை (சுவை)
ஃப்ரீ தானுங்க ,சும்மா சிரிங்க ...



வாத்தியார் :- என்னடா ஆறு மார்க் வாங்கிட்டு சிரிக்கிற ,
              உனக்கு வெட்கமா இல்ல ?

மாணவன் :- நான் ஒன்னுமே எழுதல ,அதுக்கு போய் ஆறு
            மார்க் போட்டு இருக்கீங்களே ,உங்களுக்கு 
             வெட்கமா இல்ல !



எல்கேஜி பையன் :- ஹலோ டீச்சர் இன்னிக்கு என் பையன் 
                    ஸ்கூலுக்கு வர மாட்டான் ,அவனுக்கு 
                    உடம்பு சரியில்லை

         டீச்சர் :- நீங்க யார் பேசறது ?

        பையன் :- எங்க அப்பா பேசறேன்



எல்.கே ஜி பையன் 1:- டேய் மச்சான் நம்ம வாத்தியாரு தம்
அடிச்சா கேன்சர் வரும்னு சொல்றாரே உண்மையாடா?

பையன் 2 :- இல்ல மச்சி ,அவரு பொய் சொல்றாரு ,தம் 
அடிச்சா புகை தான் வரும் ,நான் பாத்திருக்கேன் மச்சி !.


கணவன் :-(சாமியாரிடம் ) என் மனைவியின் வாயை கட்டிப் 
போட ஒரு மந்திரம் இருந்தால் சொல்லுங்களேன்

சாமியார் :- அது பண்ண முடியாம தானே நானே சாமியார் ஆனேன் .



ஒருவர் :- ஐயா வணக்கம்க ,நான் மீன் வளர்க்கிறேன் ,அதுக்கு
கொஞ்சம் புழு வேண்டும் ,எங்க கிடைக்கும்.

மற்றொருவர் :- பக்கத்து தெருவுல ரேசன் கடை இருக்கு.
அங்க கிடைக்கும்.


டீச்சர் :-படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு 
இருக்கீங்க?

மாணவன் :-புத்தகத்தை மூடி வைக்கலாம்னு இருக்கேன் டீச்சர்!


புருசன் :-ஆமா ,என்னடி இவ்வளவு நேரமா காலேண்டரை 
பார்த்துக்கிட்டு இருக்க.

மனைவி :-பல்லி விழும் பலன் பற்றி பார்த்துக்கிட்டு இருக்கேன்

புருசன் :-கொண்டா நான் பார்க்கிறேன்,ஆமா பல்லி எங்க
விழுந்தது ?

மனைவி :-நீங்க சாப்பிட்ட சாம்பாரில!!


ஒருவன் :- பஸ்ல சீட் இருந்தும் நான் நின்னுக்கிட்டு தான் வந்தேன்

மற்றொருவன் :-சீட் இருந்தும் ஏன் நின்னுக்கிட்டு வந்தே ?

ஒருவன் :- எல்லா சீட்லயும் ஜனங்க உட்கார்ந்து இருந்தாங்க  .

நன்றி 

 


Photobucket     சிரிங்கப்பா , ஜோக்கடிச்சா சிரிக்கனும்ல , நானெல்லாம் சிரிப்பே வரலன்னா கூட சிரிக்கல .சும்மா ஆக்ட் குடுங்கப்பா .





44 comments:

IlayaDhasan said...

அருமையான ஜோக்ஸ்...நல்ல தொகுப்பு.

எந்திரனை வசூலில் மிஞ்சும் ஒரியப் படம்

சம்பத்குமார் said...

கணவன் மனைவி ஜோக் சூப்பர்

நன்றி நண்பரே பகிர்விற்க்கு

kobiraj said...

காலையிலேயே மனம் விட்டு சிரிக்க முடிந்தது .நல்ல ஜோக்ஸ்

rajamelaiyur said...

Super jokes

கோகுல் said...

ஆறு மார்க் வாங்குனது நீங்களா?ஹா ஹா

Mohamed Faaique said...

நல்லாத்தானே இருக்கு..

M.R said...

IlayaDhasan said...
அருமையான ஜோக்ஸ்...நல்ல தொகுப்பு.

நன்றி சகோ,தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

தொடர்ந்து வாங்க

M.R said...

சம்பத்குமார் said...
கணவன் மனைவி ஜோக் சூப்பர்

நன்றி நண்பரே பகிர்விற்க்கு

நன்றி நண்பரே

M.R said...

kobiraj said...
காலையிலேயே மனம் விட்டு சிரிக்க முடிந்தது .நல்ல ஜோக்ஸ்

நன்றி நண்பரே

M.R said...

என் ராஜபாட்டை"- ராஜா said...
Super jokes

தேங்க்ஸ்

M.R said...

கோகுல் said...
ஆறு மார்க் வாங்குனது நீங்களா?ஹா ஹா

ஹா ஹா ஹா இல்லை நண்பரே

சின்ன வயசுல நான் நல்லாவே படித்தேன் நண்பரே

M.R said...

Mohamed Faaique said...
நல்லாத்தானே இருக்கு..

நன்றி நண்பா ,அப்ப சிரிச்சுடுங்க

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலையில் நல்ல டானிக் குடித்தமாதிரி இருக்கு..

அத்தனையும் சூபு்பர்..

Unknown said...

நல்ல நகைச்சுவைகள்..

முற்றும் அறிந்த அதிரா said...

என்னாது நகை ஃபிரீயா?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொஞ்சம் பொறுங்க உரசிப்பார்த்துத்தான் நாங்க வாங்குவோம்.. நம்பமாட்டோம்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

எதிர்ப்பாலார் எல்லோரும் பலமாச் சிரியுங்கோ:)), எங்கட சார்பிலதான் மேலே அக்காமார் எல்லோரும் சிரிக்கிறார்கள்:)))..

சூப்பர் ஜோக்ஸ்ஸ்ஸ்ஸ் புவஹா...புவஹா....புவஹா.... இந்தச் சிரிப்பு போதுமோ? இல்ல இன்னும் கொஞ்சம் வாணுமோ? :)) கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

செங்கோவி said...

கொஞ்சமல்ல, நிறையவே சிரிச்சேன்..

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சூப்பரோ சூப்பருங்கோ....

K.s.s.Rajh said...

நல்ல ஜோக்ஸ் நண்பரே மிகவும் மனம் விட்டு சிரித்தேன்

சக்தி கல்வி மையம் said...

அனைத்தும் அருமையான நகைச்சுவைகள்...

K.s.s.Rajh said...

தமிழ் மணம்-7

arasan said...

ரொம்ப நேரம் சிரிச்சேன் .. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

சிரித்தேன்
இரசித்தேன்..

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாத்தான்யா இருக்கு, அப்படியே நீங்க சின்ன வயசுல பண்ணதையும் சேர்த்து விட்டுட்டீங்க போல?

M.R said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
காலையில் நல்ல டானிக் குடித்தமாதிரி இருக்கு..

அத்தனையும் சூபு்பர்..

நன்றி நண்பரே

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல நகைச்சுவைகள்..

நன்றி பாபு

M.R said...

athira said...
என்னாது நகை ஃபிரீயா?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொஞ்சம் பொறுங்க உரசிப்பார்த்துத்தான் நாங்க வாங்குவோம்.. நம்பமாட்டோம்:)).//

பாருங்க ,பாருங்க ,உரசி பாருங்க ,அத்தனையும் பத்தரை மாத்து தங்கம்

M.R said...

athira said...
எதிர்ப்பாலார் எல்லோரும் பலமாச் சிரியுங்கோ:)), எங்கட சார்பிலதான் மேலே அக்காமார் எல்லோரும் சிரிக்கிறார்கள்:)))..//

அப்பிடியா ஹா ஹா ஹா

சூப்பர் ஜோக்ஸ்ஸ்ஸ்ஸ் புவஹா...புவஹா....புவஹா.... இந்தச் சிரிப்பு போதுமோ? இல்ல இன்னும் கொஞ்சம் வாணுமோ? :)) கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).//

ஹா ஹா ஹா நன்றி சகோதரி நன்றி

September 29, 2011 12:59 PM

M.R said...

செங்கோவி said...
கொஞ்சமல்ல, நிறையவே சிரிச்சேன்..

நன்றி நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா ஹா சூப்பரோ சூப்பருங்கோ....

நன்றி நண்பரே

M.R said...

K.s.s.Rajh said...
நல்ல ஜோக்ஸ் நண்பரே மிகவும் மனம் விட்டு சிரித்தேன்//

தமிழ் மணம்-7

மிக்க நன்றி நண்பா

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அனைத்தும் அருமையான நகைச்சுவைகள்...//

நன்றி சகோ

M.R said...

அரசன் said...
ரொம்ப நேரம் சிரிச்சேன் .. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே

M.R said...

முனைவர்.இரா.குணசீலன் said...
சிரித்தேன்
இரசித்தேன்..


நன்றி நண்பரே

M.R said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லாத்தான்யா இருக்கு, அப்படியே நீங்க சின்ன வயசுல பண்ணதையும் சேர்த்து விட்டுட்டீங்க போல?//

ஹா ஹா ஹா ஹா

அம்பாளடியாள் said...

ஹி..ஹி ..ஹி ..ஹி ..ஹி ..ஹி ...கடவுளே என்னக் காப்பாத்து
சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்குது ஹி ...ஹி ..ஹி ...அருமை
சகோ அருமை !.............புடிச்சிருக்கெண்டு தனிப்படச் சொல்ல முடியல .அனைத்தும் சூப்பர் ............சந்தோசத்தில் தளத்தில்
இணைந்துவிட்டேன் ஓட்டுப் படையில ஒரு குத்துக்கு மேல அனுமதி இல்லையே !....சின்ன வருத்தம் .வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .தொடந்தும் கலக்குங்க .

மாய உலகம் said...

நகைச்சுவை அருமை சகோ... வாழ்த்துக்கள்

Mahan.Thamesh said...

எல்லாமே அசத்தல்

மகேந்திரன் said...

ரசித்து சிரித்தேன் நண்பா...

சென்னை பித்தன் said...

த.ம.12
ஹா,ஹா,ஹா!

RAMA RAVI (RAMVI) said...

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பதர்க்கு ஏற்ற மாதிரி ஜோக்குகள்.
அருமையான பதிவு.

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,
உங்களிடமிருந்து வித்தியாசமான ஒரு பதிவு..

கலக்கலான நகைச்சுவைகள்.

ரசித்தேன்.

vetha (kovaikkavi) said...

நல்லா ஆக்ட் பண்ணத் தேவையில்லீங்க நெசம்மாவே சிரிப்பு சிரிப்பா வந்ததுங்க! மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Anonymous said...

நல்ல வேளை...இன்னைக்கு யோகா கிளாஸ் கட்...-:)

கலக்கலான நகைச்சுவை...

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out