வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, June 3, 2011

தகவல்

கொசுவை விரட்ட புதிய வகை கியாஸ்; இந்திய வம்சாவழி விஞ்ஞானி கண்டு பிடித்தார்
கொசுவை விரட்ட 
 
புதிய வகை கியாஸ்;
 
இந்திய வம்சாவழி விஞ்ஞானி கண்டு பிடித்தார்

 
கொசு கடிப்பதால் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மனிதனை தாக்குகின்றன. எனவே கொசுவை ஒழிக்க எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டும் இதுவரை அதில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது கொசுவை விரட்டுவதற்காக ரசாயன மருந்துகளை கொண்ட கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
 
ஆனால் இவை மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த விஞ்ஞானி தலைமையிலான ஒரு குழுவினர் கொசுவை விரட்டுவதற்கான புதிய வகை கியாஸ் ஒன்றை கண்டுபித்துள்ளனர்.
 
இதை நாம் படுத்திருக்கும் அறையில் பரவவிட்டால் கொசுக்கள் அங்கிருந்து ஓடிவிடும். பொதுவாக கொசுக்கள் மனிதனின் ரத்த வாடையை மோப்பம் மூலம் உணர்ந்து தான் நம்மை கடிக்கின்றன. ஆனால் இந்த கியாசை அறைக்குள் பரவவிட்டால் கொசுக்களுக்கு ரத்த வாடை தெரியாமல் குழப்பம் ஏற்படுத்துகின்றன.
 
எனவே மனிதனை கொசுக்கள் கடிக்காமல் அங்கிருந்து ஓடிவிடுகின்றன. விரைவில் இந்த கியாஸ் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கியாஸ் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். கொசுக்களினால் பரவும் மலேரியா நோயால் உலகில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் பலியாகிறார்கள்.
 
அதாவது 30 வினாடிக்கு ஒருவர் உயிர் இழக்கின்றார். இந்த புதியவகை கியாசால் மலேரியா நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out