வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, July 14, 2011

மனம்போல் வாழ்க்கை - 5

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மாற்றத்தை எற்படுத்திக் கொள்ளவிரும்பினால் , உங்கள் மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்".                                                                                                                         

இன்று நாம் பார்க்கப் போவது துரும்பை தூணாக்குவது அவசியமாஎந்தஒரு சின்ன விசயத்தையும் நாம் பெரிது படுத்தி பார்ப்பதே காரணம் என்ற உன்மை அனைவருக்கும் தெரியும் .

இது போன்ற விசயங்கள் நம்மை தொல்லை படுத்துகின்றன ,
கவலை படச் செய்கின்றன .என்பது மறுக்க முடியாத உண்மை .


                                                                                                                       
சின்ன விசயங்களில் கவணம் செலுத்தும் பொழுது பெரிய
லட்சியங்களை கவனிக்க தவற விடுகிறோம் .                                                                                                    

சின்ன விசயங்களை சின்ன விசயங்களாக பார்க்காததால்
தான் பல உறவுகள் பிரிகின்றன.                                                                                                                                       சின்ன சின்ன விசயங்களுக்கு கோபபடுவதை விட்டுவிட்டு
 நிதானமாக இருங்கள்.

 மீண்டும் சொல்கிரேன் துரும்பை தூனாக்காதீர்கள்.                                                                                காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை சிறு சிறு
விசயங்களுக்காக எத்தனை டென்சன் இதனால்
எத்தனை உறவுக்குள் மனக்கஷ்டம்.                                                                      

உதாரணத்திற்க்கு ஒரு குறுகலான பாதையில் வாகனத்தில்
செல்லும் போது வழியில் நான்கு பேர் சுவாரஸ்யமான
 பேச்சினால் பாதையில் நிற்கிறார்கள்.அவர்கள் வேண்டும்
என்று அப்பிடி நிற்க வில்லை .இருந்தாலும் நமக்கு எரிச்சல் வருகிறது.

அதோடு போனதா இல்லை , நாம் போக வேண்டிய இடம் வரை அந்த எரிச்சலை சுமந்து செல்கிரோம். அலுவலகமோ, வீடோ அந்த எரிச்சலின் மிச்சத்தை அங்கு வெளிப்படுத்துகிறோம்.

விளைவு அங்கும் விரிசல் .அதனால் மேன்மேலும் டென்சன்.                                                                                      அதனால் சிறு விசயங்களை (பிரச்சனைகளை) சுமந்து செல்லாதீர்கள் .                      


யோசிக்காமல் செய்கிரபோது பெரிய விசயமாக தெரிவது, யோசித்து பார்க்கும் போது சிறிய விசயமாகி விடுகிறது.                                                                                           


தொடரும்...........                                                                                                                             

பிறகென்ன நண்பர்களே உங்களிடம் வாக்கும் , கருத்தும் மட்டுமே. வாக்கு கூட எனக்காக இல்லை நண்பர்களே,உங்களுக்கு பிடித்த விசயம் மற்றவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதர்க்காக.  உங்கள் நண்பன்





கவலை இல்லா வாழ்க்கை,
பசிக்கும்போது உணவு
மற்ற நேரம் களிப்பு



                                                         உன்னால் முடியும் நம்பு
                                                     உன் வாழ்க்கை உன் கையில்
                                                        நீ நினைத்தால் எதுவும்
                                                               உன் கையில்                                         

4 comments:

மாய உலகம் said...

சரி தான்.... பிரச்சனை சிரிய கல் போன்றது,,, அதை கண்ணுக்கு அருகில் வைத்துப்பார்த்தால் உலகிலயே அதான் பெரியதாக தெரியும்...அதையே தூர வைத்துப்பார்த்தால்.., உலகிலயே அதான் சிரியதாக தெரியும். நல்ல பதிவு

இராஜராஜேஸ்வரி said...

கடுகுபோகும் வழியை ஆராய்ந்து கொண்டிருந்தால் பூசணி போகும் இடம் தெரியாது.

யானை வேட்டைக்குச் செல்லும் போது முயலின் மீது கவனம் செலுத்தக்கூடாது.

M.R said...

மாய உலகம் said...
சரி தான்.... பிரச்சனை சிரிய கல் போன்றது,,, அதை கண்ணுக்கு அருகில் வைத்துப்பார்த்தால் உலகிலயே அதான் பெரியதாக தெரியும்...அதையே தூர வைத்துப்பார்த்தால்.., உலகிலயே அதான் சிரியதாக தெரியும். நல்ல பதிவு


வாழ்த்துக்கு நன்றி

M.R said...

இராஜராஜேஸ்வரி said...
கடுகுபோகும் வழியை ஆராய்ந்து கொண்டிருந்தால் பூசணி போகும் இடம் தெரியாது.

யானை வேட்டைக்குச் செல்லும் போது முயலின் மீது கவனம் செலுத்தக்கூடாது.

அதான்..... அதேதான்

கரக்டா புரிஞ்சிக்கிட்டிங்களே

நன்றி மேடம்

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out